Monday, October 11, 2010

ஹைக்கூ கவிதை

பட்டுப்புழு

பட்டுப்புடவையில்
வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...

அழுகை

பூமி அழுக்காவதைக் கண்டு
மேகம் அழுகிறது....
மழை!

காதலியே...!

பிடிக்கவில்லை என
ஒரு முறை
சொல்லியாவது விடு;
நீ பேசியதை -
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!

நன்றி கடன்

அடுத்த பிறவியில்
எனக்கு மகளாக
என் தாய்.......

ஒருதலைக் காதல்...

அவன்
கானலுக்குள்
மீன் பிடித்தான்
ஒருதலைக் காதல்...!

காதலர்கள்!

இரு மீன்கள்
மாட்டிக் கொண்டன
ஒரே தூண்டிலில்-காதல்!

ஒற்றை ரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

மேகம்

தின்ன முடியவில்லை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்!

காதல்

வெள்ளைக் காகிதத்தில்
ஒற்றை வரிக் கவிதை
காதலியின் பெயர்!

தோல்வி

காதலித்தால்
அழகு வரும்,
காதலில் தோற்றால்
அழுகை வரும்!

ஹைக்கூ கவிதை

கறுத்த முகம்

யார் திட்டியது?
கறுத்து கிடக்கிறது
மேகத்தின் முகம்!

ஹைக்கூ கவிதை

மழைநீர்

கொடுத்த தெய்வம்
கூரையைப் பிய்த்தது...
வீட்டுக்குள் மழைநீர்!

2020-ல் இந்தியா?


அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு
எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று
எண்ண தோன்றுகிறது.
"மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்
விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம்
வெள்ளம் - வறட்சி"
இன்னும் பட்டியல் ஏராளம்,

2020-ல் இந்தியா?

இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம்,
ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி
வயற்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .
"அவன் அடுத்த வேலை சோற்றுக்கு!"

"அவன் கண்டவையோ ஏராளம்,
வறட்சியில் பட்டினிச்சாவு,
வெள்ளத்தில் பொட்டலச்சோறு,
அழுகிய பயிர்கள், உணவிற்கு எலிக்கறி,
இன்னும் எத்தனையோ!"

"எல்லாவற்றையும் தாண்டி,
அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான்
இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி!
"தமிழகத்தின் மீது சோக ரேகைகள்
இன்றும் படர்ந்து கொண்டுதான்
இருக்கின்றன - வறண்ட நதிகளாய்!"

இந்தியா முன்னேறுகிறது?
ஆம் இந்தியா முன்னேறுகிறது.

"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ
மாதத்திற்கு பல லகரங்கள்,
உணவுப்பொருள் உற்பத்தியாக்கும்
இந்தியனுக்கு?
வருடந்தோறும் அரசாங்கம் தரும்
இழப்பீட்டு தொகைதான் - அவன்
வருட வருமானமோ?....."

"உழவனின் அரிசி என்ன
அற்பமாகிவிட்டதா?
மறந்துவிட்டாயா மனிதனே,
உன் இறப்பிலும் கூடவருவது
வாய்க்கரிசிதான்!"

தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும்,
அதில் ஐயமில்லை - அன்று
நம் உழவுத்தோழனை
சிற்றரசனாக்க வேண்டாம்,
ஒரு சராசரி மனிதனாகவாவது
அவன் களிப்பாக வாழட்டுமே?


காலத்தின் கோலம்!

மழை இல்லாத
மாநகரத்தில்
விவசாயம் இல்லை.
ஆனால்
விளைச்சலோ அமோகம்...
அடுக்குமாடி வீடுகள்!

திருமணம்!


திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!

காதல் கவிதை


எங்கோ பிறந்த உரமும், நிலமும்,
கலக்கின்றன வேளாண்மையில்...

எங்கோ பிறந்த நதிகள்,
கலக்கின்றன கடலில்...........

எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும்,
கலக்கின்றன நகைகளில்...

எங்கோ பிறந்த பட்டும், நூலும்,
கலக்கின்றன புடவைகளில்...

எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும்,
கலக்கின்றன கவிதைகளில்...

எங்கோ பிறந்த நானும், நீயும்,
கலக்கின்றோம் நம் திருமணத்தில்...

கடவுள்

யார் சொன்னது
கடவுள் இல்லையென்று?
பார்த்தோம்...
சிரித்தோம்...
மகிழ்ந்தோம்...
ஒரே வீட்டிலும்
வாழ்ந்தோம்
பெற்றோரை
கடவுளுக்கு மேலாக நினைத்து...

கவிதை புதிர் கீழே...

ஞாயிறு அன்றும்
ஓய்வெடுக்காத ஞாயிறு
-------

விடியலுக்கு
விளக்கேற்றிய விரல்கள்
---------- எழுதுகோல்.

கைக் குட்டைக்குள் வானம்
குடத்திற்குள் குற்றால அருவி
முத்தமிழ் அறிஞர் --------

அமாவாசை இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
-------- ஆட்சி

நெருப்பிலும்
ஒளிரும் தங்கம்
---------

இமயங்கள் சரியலாம்
கோபுரங்கள் சாயலாம்
தோல்வியை தழுவாத -------

எதிரிகளுக்கு அக்னி நட்சத்திரம்
மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்
--------

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாலும்
அசைக்க முடியாத ஆயிரங்கால் மண்டபம்
--------

இலையுதிர் காலத்தைத் தாண்டியும்
மணம் பரப்பும் தொல்காப்பியப் பூங்கா
--------

அண்ணா சாலையில் பவனிவரும்
திருவாரூர் தேர்
--------

காகித கப்பலையும்
கரைசேர்க்கும் மாலுமி
--------

சாலையோரத்து மக்களுக்கும்
ஆடை வழங்கும் கண்ணன்
--------

காகித விசிறிகளுக்கு மத்தியில்
தாலாட்டும் தென்றல்
--------

அறியாமைகள் அகற்றும்
ஆயுத எழுத்து
--------

மேலே உள்ள கவிதை(?) ஒரு பிரபல நாளிதழில் வந்தது. எழுதியவர் ஹரன்பிரசன்னா இல்லை. -------- என்ற இடத்தில் என்ன வரும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். முடியாதவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் :-) பிகு: சரியான விடை வரும் வரை பின்னூட்டங்கள் வெளியே வராது