Monday, October 11, 2010


கவிதை புதிர் கீழே...

ஞாயிறு அன்றும்
ஓய்வெடுக்காத ஞாயிறு
-------

விடியலுக்கு
விளக்கேற்றிய விரல்கள்
---------- எழுதுகோல்.

கைக் குட்டைக்குள் வானம்
குடத்திற்குள் குற்றால அருவி
முத்தமிழ் அறிஞர் --------

அமாவாசை இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
-------- ஆட்சி

நெருப்பிலும்
ஒளிரும் தங்கம்
---------

இமயங்கள் சரியலாம்
கோபுரங்கள் சாயலாம்
தோல்வியை தழுவாத -------

எதிரிகளுக்கு அக்னி நட்சத்திரம்
மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்
--------

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாலும்
அசைக்க முடியாத ஆயிரங்கால் மண்டபம்
--------

இலையுதிர் காலத்தைத் தாண்டியும்
மணம் பரப்பும் தொல்காப்பியப் பூங்கா
--------

அண்ணா சாலையில் பவனிவரும்
திருவாரூர் தேர்
--------

காகித கப்பலையும்
கரைசேர்க்கும் மாலுமி
--------

சாலையோரத்து மக்களுக்கும்
ஆடை வழங்கும் கண்ணன்
--------

காகித விசிறிகளுக்கு மத்தியில்
தாலாட்டும் தென்றல்
--------

அறியாமைகள் அகற்றும்
ஆயுத எழுத்து
--------

மேலே உள்ள கவிதை(?) ஒரு பிரபல நாளிதழில் வந்தது. எழுதியவர் ஹரன்பிரசன்னா இல்லை. -------- என்ற இடத்தில் என்ன வரும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். முடியாதவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் :-) பிகு: சரியான விடை வரும் வரை பின்னூட்டங்கள் வெளியே வராது

No comments:

Post a Comment