Monday, October 11, 2010

காதல் கவிதை


எங்கோ பிறந்த உரமும், நிலமும்,
கலக்கின்றன வேளாண்மையில்...

எங்கோ பிறந்த நதிகள்,
கலக்கின்றன கடலில்...........

எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும்,
கலக்கின்றன நகைகளில்...

எங்கோ பிறந்த பட்டும், நூலும்,
கலக்கின்றன புடவைகளில்...

எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும்,
கலக்கின்றன கவிதைகளில்...

எங்கோ பிறந்த நானும், நீயும்,
கலக்கின்றோம் நம் திருமணத்தில்...

No comments:

Post a Comment