Monday, October 11, 2010

ஹைக்கூ கவிதை

பட்டுப்புழு

பட்டுப்புடவையில்
வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...

அழுகை

பூமி அழுக்காவதைக் கண்டு
மேகம் அழுகிறது....
மழை!

காதலியே...!

பிடிக்கவில்லை என
ஒரு முறை
சொல்லியாவது விடு;
நீ பேசியதை -
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!

நன்றி கடன்

அடுத்த பிறவியில்
எனக்கு மகளாக
என் தாய்.......

ஒருதலைக் காதல்...

அவன்
கானலுக்குள்
மீன் பிடித்தான்
ஒருதலைக் காதல்...!

காதலர்கள்!

இரு மீன்கள்
மாட்டிக் கொண்டன
ஒரே தூண்டிலில்-காதல்!

ஒற்றை ரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

மேகம்

தின்ன முடியவில்லை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்!

காதல்

வெள்ளைக் காகிதத்தில்
ஒற்றை வரிக் கவிதை
காதலியின் பெயர்!

தோல்வி

காதலித்தால்
அழகு வரும்,
காதலில் தோற்றால்
அழுகை வரும்!

No comments:

Post a Comment