Thursday, June 10, 2010

அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'


போன வாரம் கலைஞர் நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற தலைப்பில் 'அவாள்' கவிதை(?) ஒன்றை முரசொலியில் எழுதியிருந்தார் முதலமைச்சர். இவராக இருக்குமோ ? அவராக இருக்குமோ ? என்றெல்லாம் பலர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்...கவிதை யாரை பற்றியது என்பது முக்கியாமில்லை; சில கேள்விகள் தமிழக முதலமைச்சருக்கு :


1. முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து கவிதை எழுதலாமா? சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ?

2. பிராமண சமூகத்தவரை மட்டுமே ஏன் எப்போது எழிவு படுத்துகிறீர்கள் ? அடுத்த முறை உங்க கனவில் அண்ணா, பெரியார் வரும் போது நல்ல அறிவுரைகளை கேட்டு தெரிந்துக்கொள்வீர்களா ?

3. மைனாரிட்டி அரசாக இருந்தாலும் நீங்கள் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சர் என்பது தெரியுமா ? சாதிகளை பற்றி பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா ?

4. 'ஐந்து முறை பதவிப் பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு 'எந்த விருப்பும் வெற்ப்பும் இன்றி..' என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா? அதைக்கூட விடுங்கள். இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?


5. தேர்தலில் இதை பகிரங்கமாகச் சொல்லி, அவாள் ஓட்டு வேண்டாம் என்னும் தைரியமும் நேர்மையும் கொஞ்சமாவது உண்டா?



கீழே உள்ள கவிதை(?) விகடன் தளத்தில் பாலு என்பவர் கமெண்டாக எழுதியிருந்தார்.

No comments:

Post a Comment