வழக்கம் போல் கலைஞர் பேசியுள்ளார் டென்ஷன் ஆகாதீங்க :-)
எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜ் டி.வி.யின் 24 மணிநேர செய்தி சேனலைத் தொடங்கி வைத்து அவர் பேசியது...
எனது பெயரிலேயே ஒரு டி.வி. சேனல் இருக்கும்போது மற்றொரு டி.வி. சேனலுக்கு விளம்பரம் தருகிறாரே என்று சிலர் கருதலாம். எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான். எல்லா டி.வி.யும் நான் வளர்க்க வேண்டிய டி.வி.தான்.
ராஜ் டி.வி. வளர்ந்து அரசுக்கும் அதன் மூலம் பொதுமக்களுக்கும் நன்மை கிடைக்குமானால் அதனை நான் பாராட்டுவேன். போற்றுவேன். அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பேன்.
எப்போதுமே விழாவுக்கு அழைப்பவர்கள் உண்மையும் பேச வேண்டும். உண்மைக்கு மாறானதையும் பேச வேண்டும். அதைத்தான் "பொய்மையும் வாய்மையிடத்து' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நல்லது நடக்கும் என்றால் பொய்கூட சொல்லலாம் என்ற வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றி பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் என்று அழைத்து வந்துவிட்டு என்னைப் பேச வைத்து விட்டார்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனால்தான் திமுக அரசு இலவச கலர் டி.வி.க்களை வழங்கி வருகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன
Thursday, June 10, 2010
எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் - கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment