என்னுடைய கவிதை எழுதுவது எப்படி என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.
இப்பொழுது சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்பதைப் பார்ப்போமா?
ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது காகிதத்தில் "ம" என்று எழுதுங்கள்.
"ம"விற்குப் பக்கத்தில் "ழ" என்று எழுதுங்கள்.
அதற்குப் பக்கத்தில் "லை" என்று எழுதுங்கள்.
"மழலை" என்று எழுதியிருக்கிறீர்களா?
இப்பொழுது சொல்லுங்கள், மழலை - அதாவது ஒரு குழந்தையை விட அழகான சிறந்த கவிதை இந்த உலகத்தில் இருக்கிறதா? இல்லவே இல்லை.
சிறந்த கவிதை எழுதுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?
பின்னர் வேறொரு பாடத்தில் சந்திப்போமா?
No comments:
Post a Comment