
ரத்த சரித்திராவுக்கு பிரச்சனை அப்படியென்றால் ராவணாவுக்கு வேறு மாதிரி! சீதா பிராட்டிய நாங்க தெய்வமா கும்புடுறோம்.
ஆனா அவங்க ராவணன் கூட டூயட் பாடுற மாதிரி சீன் வச்சா எப்படிய்யா பொருத்துக்க முடியும்னு காவி கொடியை தூக்கி கலவரம் பண்ண கிளம்பிருச்சு ஒரு அமைப்பு. எலக்ஷன் நேரத்தில முளைக்கிற லெட்டர் பேட் கட்சின்னா விட்டுடலாம். இது வட மாநிலத்தில் கொஞ்சம் ஸ்டிராங்காகவே இருக்கிற இந்து ஜனசாக்ரன் சமீதி என்ற அமைப்பாம்!
இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் மேலே நீங்கள் படித்தது. இராமயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்றுதான் இந்த படத்தை பற்றிய தகவல்கள் வெளிவருகிறது. அப்படியிருக்கும் போது சீதா தேவி பாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராயுக்கும் ராவணன் கேரக்டருக்கும் இடையே காதல் துளிர்ப்பதாக காட்சிகளை வைத்திருப்பது நியாயமா என்கிறது இந்த அமைப்பு. எனவே இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை உடனே திரும்ப பெற வேண்டும் என்று சென்சார் அமைப்பை வலியுறுத்துகிறதாம் அக்கடிதம்.
இல்லைன்னா…? படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல காவிக் கொடியுடன் போராடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்களாம். சிவனே…ன்னு கிடந்தாதான் சாமியாரு. மவனே…ன்னு பல்லை கடிச்சா?
No comments:
Post a Comment