Thursday, June 10, 2010

கலைஞர்

கலைஞர் 2 காலால் நடக்கும் முன்றாம் தமிழ்
5 விரல்களை அகலவிரித்துக்காட்டி
ஐந்துமுறை அரியணை
ஏறிய ஆறாம் அறிவு
அரசியல் அரங்கில்
குத்துப்பாடுகளுக்கு நடுவில்
குன்றாமல் நிமிர்ந்து இருக்கும்
பத்துப்பாட்டு
மறுபடியும் மதுரை
வந்திருக்கும் தமிழ்ச்சங்கம்
எல்லோருக்கும் நீ கலைஞர்
எனக்கு நீ கடவுள்
என் உயிர் எனும் பயிர்
நிமிர்ந்து இருப்பது உன்னால்
எங்கள் பாட்டரசை பாராட்ட
வந்திருக்கும் நாட்டரசு
உறுதியானது உன் கூட்டணி
தலைவர் என்று உன்னை
தலைமேல் தாங்க
தமிழகம் தவம் இருக்கும்
தமிழ்மணம்
இருக்கும்போது
திண்டிவனம் எதற்கு
உழவர்பால் உருகிய உனது
சிந்தை உருவாக்கியது
உழவர்சந்தை
விவசாயிகளை பற்றி
விஜயகாந்த் கேட்க
நீ பதில் சொல்ல
வேண்டியது இல்லை
சமத்துவபுரம் சமைத்தவன் நீ
சரத்துமாருக்கு பதில் சொல்ல
வேண்டியது இல்லை
எப்படி பறப்பது என்பதௌ
விட்டில் பூச்சிகள்
சொல்லிக்கொத்தா
விமானத்துக்கு தெரியவேண்டும்
நீ மூத்த தலைவன், புகழ்
பூத்த தலைவன்
தடியில்லாத பெரியார்
பொடியில்லாத அண்ணா
இருவரும் உன்வடிவில்
இருக்கிறார்கள் ஒண்ணா

No comments:

Post a Comment